Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடந்தே தீரும்- பாரிவேந்தர் எம்.பி.பேட்டி

பிப்ரவரி 06, 2021 11:26

திருச்சி: பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான பாரி வேந்தர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பாரிவேந்தர் எம்.பி. பதில் அளிக்கையில், தூண்டியும் செய்யாமல் இருப்பது தவறு. தூண்டியதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி, வாழ்த்துக்கள். தூண்டப்பட்ட பிறகு செய்யாமல் இருந்தால் அது அதை விட தவறு. அதை செய்து இருக்கிறார் அதற்காக நன்றி.

இந்த சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடியலை தரும்.நல்ல மாற்றத்தை தரும். அரசியல் மாற்றம் நடந்தே தீரும். நல்ல பல திட்டங்களை கொடுக்கும். இது நான் மட்டும் அல்ல. நாட்டு மக்களும் நினைத்து இருக்கிறார்கள் என்றார். 

தலைப்புச்செய்திகள்