Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவை அடுத்த மாவேலிக்கரா பகுதியை சேர்ந்தவர் நெல்சன். கொல்லத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நெல்சனின் மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதில் நெல்சனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் வந்த வாகனங்களால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதனை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ரெஞ்சித் தட்டிக்கேட்டார். அவரை திருமணத்திற்கு வந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த ரெஞ்சித்தை அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரெஞ்சித் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாவேலிக்கரை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மணமகனின் தந்தை நெல்சன் உள்பட 4 பேரை கைது செய்தனர். இதற்கிடையே திருமண வீட்டில் ரெஞ்சித் தாக்கப்படும் சம்பவம் சமூக வலை தளங்களில் பரவியது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.