Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உ.பி.யில் காலிஸ்தான் அமைப்பு ஆதரவாளர்கள் கைது

பிப்ரவரி 09, 2021 11:18

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் விகாஸ் நகர் பகுதியில் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான ஜக்தேவ் சிங்கை பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச போலீசின் கூட்டுப்படையினர் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘‘காலிஸ்தான் தீவிரவாதிகளான பரம்ஜித் சிங் மற்றும் மல்தானிசிங் ஆகியோருடன் ஜக்தேவ்சிங் தொடர்பில் உள்ளார்.

பரம்ஜித்சிங், மல்தான்சிங் இருவரும் பஞ்சாபில் தேச விரோத நடவடிக்கைகள், தீவிரவாதத்தை ஊக்குவிப்பது போன்றவற்றில் குற்றவாளிகள் ஆவர். அவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்கள் ஜக்தேவ்சிங்கை தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபடுத்த தயார் செய்துள்ளனர்’’ என்றனர்.

தலைப்புச்செய்திகள்