Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க. தலைவருக்கு விவசாயிகள் சங்கங்கள் நேரில் நன்றி 

பிப்ரவரி 10, 2021 06:18

சென்னை: மு.க.ஸ்டாலினிடம், “அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு”வினர் கூறியதாவது:தமிழகத்தில் இந்த பருவ ஆண்டில் பெய்த பெருமழையால் விவசாயிகள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பருவத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் அறுவடை செய்யும் காலத்தில் வெள்ளத்தில் மூழ்கி, தமிழகம் முழுவதும் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த சமயத்தில், விவசாயிகள் நிர்கதியாக கைவிடப்பட்ட நிலையில், கூட்டுறவு கடன்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாயக்கடன்கள் என முழுமையாக தள்ளுபடி செய்து, இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்து பல போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சி தலைவராகிய நீங்கள், விவசாயிகள் மீது கொண்ட அன்பால், “நான் ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்வேன்” என்று அறிவித்தீர்கள். இது விவசாயிகளுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை வாய்மூடி இருந்த தமிழக அரசின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலை கருத்தில் கொண்டு, விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

எப்படியோ இன்னும் சில மாதங்களில் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய கடன் தள்ளுபடி பலன், தங்களின் அறிவிப்பால் உடனடியாக கிடைத்திருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களால் பலன் அடைந்திருக்கிறார்கள். அதற்காக தமிழக விவசாயிகளின் சார்பில் தங்களுக்கு (மு.க.ஸ்டாலினுக்கு) நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினர்.

தலைப்புச்செய்திகள்