![](admin/uploads/.5c9864d1a08217.55655677.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: நபிகள் பெருமானாரைப பற்றி அவதூறாக பேசிய, ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கல்யாணராமனை கைது செய்ய வலியுறுத்தி திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை வழியிலேயே தடுத்தி நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
நபிகள் பெருமானாரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி, கோவை மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டம் ஒன்றில், மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து, அதனை சமூக வலை தளங்களிலும், பரவவிட்ட, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கல்யாணராமன் என்பவரை, தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்ய வலியுறுத்தி, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை, ஒட்டுமொத்தமாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சார்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர்.
முற்றுகையிட வந்தபோது, வருகிற வழியிலேயே, அவர்களை, மாவட்ட அறிவியல் மையம் அருகே, தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட, பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதில் கலந்து கொண்டு, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கல்யாணராமனை கண்டித்தும், அவரை கைது செய்ய கோரியும் குரல் எழுப்பினர்.