Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலிக்கு வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.முக.வினர் ஏற்பாடு

பிப்ரவரி 11, 2021 08:14

திருநெல்வேலி: தமிழக முதல்வர் திருநெல்வேலிக்கு வர இருப்பதை யொட்டி விழா ஏற்பாடுகள் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டார். சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக இம்மாதம் 18-ம் தேதி, திருநெல்வேலி வர இருக்கிறார்.

அவருடைய நிகழ்ச்சி நிரல்களை தயாரிப்பது மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பான சிறப்பு  ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவருமான "தச்சை" என்.கணேசராஜா, தலைமை வகித்தார்.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, இந்தக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, முதல்வரின் வருகை தொடர்பாக, பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் ராஜலட்சுமி  "முதல்வரின் தேர்தல் சுற்றுப்பயணம், ஜனரஞ்சமாகவும், வெற்றிகரமாகவும் அமைவதற்கு, கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில், மாநில அமைப்புச் செயலாளர் "சுதா" கே.பரமசிவன், "பாப்புலர்" முத்தையா, "கல்லூர்" இ.வேலாயுதம், "பரணி" ஏ.சங்கரலிங்கம், பி.சவுந்தர்ராஜன், எம்.மகபூப் ஜான், வி.நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்