Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: மாநிலங்களவை காங்கிரஸ் தலைவராக இதுவரை குலாம்நபி ஆசாத் இருந்து வந்தார். அவருடைய எம்.பி. பதவிக் காலம் வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் பதவி காலியாகிறது. எனவே மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதிய நபர் நியமிக்கப்படுகிறார்.
கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தற்போது மாநிலங்களவை எம்பி.யாக உள்ளார். அவரை தலைவராக நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இததொடர்பான பரிந்துரை மாநிலங்களவை தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அவைத்தலைவர் ஒப்புதல் அளித்ததும், மாநிலங்களவை காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே முறைப்படி தேர்வு செய்யப்பட இருக்கிறார்.மல்லிகார்ஜுன கார்கே ஏற்கனவே பாராளுமன்ற மக்களவையில் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.