Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோரிக்கை நிறைவேறாவிட்டால் கோட்டைக்கே நீங்கள் வரலாம்- மு.க.ஸ்டாலின்

பிப்ரவரி 15, 2021 01:32

புதுக்கோட்டை:தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இன்று புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமயம் சட்டமன்ற தொகுதியான ஊனையூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

காலை சரியாக 10 மணிக்கு ஊனையூர் கிராமத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் போடப்பட்டது. அந்த திட்டம் கைவிடப்பட்ட போதிலும் அந்த ஆழ்குழாய் கிணறுகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் தீர்க்கப்படாமல் உள்ள முக்கிய பிரச்சினைகள் வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:இங்கு நடைபெறுவது கூட்டம் அல்ல, மாநாடு போன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்களும் இங்கு வந்திருக்கிறீர்கள்.இன்றைக்கு உங்கள் குறைகளை, பிரச்சினைகளை கோரிக்கை மனுக்களாக அளித்திருக்கிறீர்கள். இந்த கோரிக்கை மனுக்களை நான் அறிவாலயத்துக்கு எடுத்து செல்வேன். உங்களுடைய பேராதரவுடன் நான் ஆட்சி பொறுப்பேற்ற மறுநாள், இந்த புகார் மனு பெட்டி திறக்கப்படும். 

திறக்கப்பட்ட 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும். ஒருவேளை முடியாவிட்டால் நீங்கள் நேரடியாக இந்த பதிவு எண் கொண்ட அட்டையை எடுத்துக்கொண்டு எந்த அனுமதியும் இல்லாமல் கோட்டைக்கு வாருங்கள். முதல்வர் அறைக்கே நேரடியாக வரலாம். உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.என்று ஸ்டாலின் பேசினார்.

தலைப்புச்செய்திகள்