![](admin/uploads/.5fd33abedd4813.32674748.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமணமான பெண்களுக்கு இன்று தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு தாலிக்கு தங்கம் மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிதான் அமோக வெற்றி பெறும். அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்.
ஆனால் அ.தி.மு.க. தலைமை அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் இல்லை என்று கூறினார். சசிகலாவை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சசிகலாவை நான் எந்த சூழ்நிலையிலும் நேரில் சந்திக்க மாட்டேன். சசிகலாவை நான் நிச்சயமாக சந்திக்க வாய்ப்பு இல்லை என்றார்.