Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முக்கிய பிரமுகர்களை 24-ந்தேதி சந்திக்கிறார் சசிகலா 

பிப்ரவரி 20, 2021 08:55

சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ந்தேதி விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை சசிகலா சந்திக்க உள்ளார்.

பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சசிகலா விடுதலையாகி கடந்த 8-ந்தேதி சென்னை திரும்பினார். சென்னையில் அவர் எப்போது கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவரது உருவப்படத்திற்கு சசிகலா வீட்டில் இருந்தபடியே மரியாதை செலுத்த உள்ளார். அதன் பிறகு அன்றைய தினம் விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.

சென்னையில் கோவிலுக்கு செல்லவும் சசிகலா திட்டமிட்டுள்ளார். டாக்டர்கள் எப்போது வெளியில் செல்லலாம் என்று சொல்கிறார்களோ அப்போது சசிகலா கோவிலுக்கு செல்வார். கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார், பத்திரிகை  நிருபர்களையும் சந்திப்பார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்