![](admin/uploads/.5d467bc3db9f60.08818157.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவள்ளூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24 ஆம் தேதி அதிமுக சார்பில் கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோயிலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தங்க தேரை கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து இழுத்து சென்று சாமி தரிசனம் செய்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் தங்க தேர் இழுத்ததாக தெரிவித்தார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.