![](admin/uploads/.61b08c2bbfc181.21628163.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விருதுநகர் : அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மூவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்து கைது செய்தனர்
அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடி உள்ளனர். கோவிலில் இருந்து சத்தம் வருவதை கேட்டு கண்விழித்த அக்கம்பக்கத்தினர் கோவிலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது பொதுமக்கள் வருவதை கண்டு கோவிலில் இருந்து மூன்று மர்ம நபர்கள் காணிக்கை பணத்துடன் தப்பி ஓடியுள்ளனர். உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட பொதுமக்கள் உடனடியாக பந்தல்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காணிக்கை பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்ற மர்மநபர்களை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் கமுதியை சேர்ந்த செல்வம், அலெக்ஸ்பாண்டியன் மற்றும் முத்துக்குமார் என தெரியவந்தது. மேலும் திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்யப்பட்டவர்கள் வேறு ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.