![](admin/uploads/.5d7cc6da45c4d4.98361156.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பிப்ரவரி 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் பாலகம் அருகில் கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வி.எஸ்.சேதுராமன் தலைமையில், கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஏ.நவநீத கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாநில வளர்ச்சி, கொள்கை குழு துணைத் தலைவரும், கழக அமைப்பு செயலாளருமான சி.பொன்னையன் கலந்து கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டி, 1000 பேர்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கினார். மேலும் ஏழை தாய்மார்களுக்கு இலவசமாக சேலைகள் வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சென்னை உயர்நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான து.சூர்யநாராயணன் செய்திருந்தார்.
இவ்விழாவில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ஏ.குமார், எஸ்.டி.எஸ்.மூர்த்தி மற்றும் அரசு வழக்கறிஞர்கள் டீக்ராஜ், பால்ராஜ் மற்றும் இன்பநாதன், பிரசாந்த், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.