Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கே.என்.நேரு தலைமையில்  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம்

பிப்ரவரி 27, 2021 11:38

திருச்சி: திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பின்பு திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:  திமுக மாநாடு தேர்தல் அறிவித்தால் மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் திமுக தலைவருடன் பேசி மாநாடு போல் இல்லாமல் கூட்டம் நடைபெறுவதற்கு திட்டமிடப்படும். இன்று மாலை தோழமை கட்சிகளுடன் கூட்டம் நடைபெற உள்ளது திமுக தலைவர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது திமுகவுக்கு எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தாது, திறந்தவெளி மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தோம். கடந்த முறையும் இதே இடத்தில் மாநாடு நடத்த திட்டமிட்ட போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது தலைவர்களுடைய அறிக்கைகள் தயாரிப்பதில் தாமதமானதால் மட்டுமே மாநாடு தேதி தள்ளிப்போனது. தேதி அறிவிக்கப்பட்டதால் மாநாடு ஒத்திவைப்பு ஐபேக் நெருக்கடியால் மாநாடு  ஏற்பாடுகள் தாமதமாகவில்லை.

 ஐஜேகே திமுக கூட்டணியில் இருந்து சென்றது அவர்களுக்குத் தான் நஷ்டம் இரண்டு மிகப்பெரிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளன பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது போல் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.  முதல்வரின் கடைசி நேர அறிவிப்புகள் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் பல சிக்கல்கள் உள்ளது. அடுத்து வரும் அரசு உரிய முறையில் விசாரித்து  நடவடிக்கை எடுக்கும். .திருச்சியில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சி வெற்றி பெறும்.

தேர்தல் விதிமுறைகள் கோவிட் தொற்றால் கட்டுப்பாடு அதிகமாக உள்ளது. கடந்தமுறை விதிமுறைகள் விதிக்கப்பட்டது அதையும் தாண்டி பணம் எடுத்துச் சென்றார்கள். பணம் கொடுத்தார்கள் .தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பார்ப்போம் .போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையை தொழிலாளர்களை  அழைத்துப் பேசி உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என கூறினர்.

இக் கூட்டத்தில் மத்திய மாவட்ட பெறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியகராஜன், சட்டமன்ற உறுப்பினர் செளந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணிகுமார், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர்கள் குடமுருட்டி சேகர், முத்து செல்வம், விஜயஜெயராஜ், ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்