![](admin/uploads/.5eb961f1c19cd6.19845020.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை நடைபெறுவதாக அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். உறுப்பினர்கள் அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் தங்கி இருக்கும்படி வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியா? அல்லது கூட்டணியில் போட்டியா? என்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.