Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்குப்பதிவு வரை 1.5 லட்சம் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்

மார்ச் 03, 2021 01:50

புதுச்சேரி: வாக்குப்பதிவு நாள் வரை தினமும் 1.5 லட்சம் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்படுகிறது.புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பலத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

மக்களுக்கு தேர்தல் குறித்தும், வாக்குப்பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகளை பதிவு செய்வது எப்படி எனவும் செயல்முறை விளக்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்