Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துணை ராணுவ படையினரின் கொடி  அணிவகுப்பு 

மார்ச் 03, 2021 02:33

பெரம்பலூர் : தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவத்தினரால் முக்கிய சாலைகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. தமிழக சட்ட சபை தேர்தல் பாதுகப்பிற்காக துணை ராணுவப்படையினரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு தேர்தலை சுமூகமாகவும், அமைதியாகவும், பொதுமக்கள் பாதுகப்பாகவும் வாக்களித்திட வழி வகை செய்யும் வகையில் 92 துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். அவர்கள் பெரம்பலூரின் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு நடத்தினர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

தலைப்புச்செய்திகள்