![](admin/uploads/.61175d8d213ac6.44499074.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர் :வடலூர் குடியிருப்பு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற மாதர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் வடலூர் ரயில்வே கேட் அருகே உள்ளது பாலாஜி நகர். இப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் உள்ளதாகவும்,
உடனடியாக குடியிருப்பு பகுதியில் உள்ள அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் டாஸ்மார்க் கடையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி கெங்காதரன் தலைமையிலான வடலூர் காவல்துறையினர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.