![](admin/uploads/.5ead2c0d25c224.27776860.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகை : அண்ணாப்பேட்டையில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அண்ணாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் இவரது குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இந்த தீ விபத்தால் வீட்டில் இருந்த அனைத்து ஆவணங்கள் உள்பட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.