Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஞ்சிபுரத்தில் நடைபாதை கடையில் தீ விபத்து 

மார்ச் 03, 2021 02:47

காஞ்சிபுரம் : தாலுகா அலுவலகம் எதிரே நடைபாதை சாலையோர கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே நடைபாதை ஓரத்தில் சிறிய காலணி கடை ஒன்று உள்ளது. வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு அதன் உரிமையாளர் சென்ற பிறகு திடீரென கடையில் இருந்து புகை வர தொடங்கியுள்ளது. 

அதன் பிறகு தீ பிடித்து அந்த கடை முழுவதும் மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை உடனடியாக அணைத்தனர். இதனால் அருகாமையில் இருந்த மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. காலணி கடையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் பல ஆயிரம் ரூபாய் பொருள் நஷ்டம் ஆகிருப்பதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்