![](admin/uploads/.60571e976a5c45.39434658.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரியலூர் : அரசு கலைக் கல்லூரி பொருளாதார துறை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரியலூரில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் பொருளாதாரத் துறையில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பெருந்தொற்று காலங்களில் கல்லூரிக்கு வர முடியாததால் இணையதளம் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 2 மாதமாக மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நேரத்தில் பொருளாதாரத் துறை தலைவர் சரியாக பாடங்களை எடுப்பதில்லை எனவும், வரக்கூடிய செமஸ்டர் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என தெரியாமல் தடுமாறுவதாகவும், எனவே பேராசிரியருக்கு வந்த பணி மாறுதலையும் ஏற்றுக்கொள்ள மறுத்து உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பொருளாதார துறை மாணவர்களின் நலன் கருதி பொருளாதார துறை தலைவரை இடமாற்றம் செய்து தொடர்ந்து பாடங்களை நடத்தும் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.