![](admin/uploads/.5d219711b51be4.94885391.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராணிப்பேட்டை :வாலாஜா டோல்கேட் அருகே சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தியவர்களை காவல்துறையினர் சிறையிலடைத்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் அருகே ஆய்வாளர் பாலு தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் விருசம்பட்டி ஊரை சேர்ந்த டிரைவர் சின்னதம்பி மற்றும் சாத்தான்குளம் வில்சன் ஆகியோர் என தெரியவந்தது. இதனையடுத்து, வாலாஜா காவல் துறையினர் கடத்தலுக்கு பயன் படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.