![](admin/uploads/.6375e5d14f8296.47704341.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர் : தலைமையின் நன்னடத்தை பண்பு குறித்து பேசுவதற்கு குஷ்பு தகுதியான ஆள் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று கடலூர் தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற எதிர்க்கட்சிகளும் காங்கிரஸ் கட்சியும் பாடுபட்டு வருகிறது என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில், 15 ஆண்டுகளாக திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்வது பெருமையாக உள்ளது என்றும், வன்னியர்களின் இட ஒதுக்கீடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, இது சாதாரணமாக தெரிவிக்க வேண்டிய பதில் அல்ல விவாதிக்க வேண்டிய விஷயம் என்றும் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவது இல்லை எனவும், இதுவரை காங்கிரஸ் கட்சியில் போட்டியிட மாநிலம் முழுவதிலும் இருந்து 1400 விருப்பு மனுக்கள் பெற பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். ராகுல் காந்தி, கடலில் குதித்தது ஒரு கட்சித் தலைமைக்கு அழகா என்று குஷ்பூ விமர்சனம் செய்துள்ளாரே என்ற கேள்விக்கு தலைமையின் நன்னடத்தை பண்பு குறித்து குஷ்பு பேசுவதற்கு தகுந்த ஆள் இல்லை என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.