Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜாதி,மதம் பார்க்கும் கட்சி திமுக - நடிகை குஷ்பூ 

மார்ச் 03, 2021 03:07

திருநெல்வேலி : தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்  மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்ற பா.ஜ.க.தேர்தல் பிரச்சாரம்  மாநிலத்திலேயே முதன் முறையாக திருநெல்வேலியில் துவங்கியது.அ.தி.மு.க. கூட்டணியில்  பா.ஜ.க. சார்பில், சட்டமன்ற  தேர்தல் பிரச்சாரம் மாநிலத்தில் முதன் முறையாக, திருநெல்வேலியில் துவங்கியது. இங்குள்ள டவுண் வாகையடி முனையில் நடைபெற்ற, முதலாவது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்,

பா.ஜ.க. வின் பேச்சாளரும், திரைப்பட நடிகையுமான குஷ்பு பங்கேற்று, உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறும்போது ராகுல் காந்தி, ஒரு தலைவரே இல்லை,  நாற்பத்து நான்கு காங்கிரஸ் எம்.பி.க்களுள், அவரும் ஒருவர்  அவ்வளவுதான் என்றார். காங்கிரசும், தி.மு.க.வும்  தான், குடும்ப அரசியல் செய்கின்றன. பா.ஜ.க.அப்படி அல்ல, இன்னும் சொல்லப்போனால், பா.ஜ.க.கட்சியானது, சாதி, மதம் பார்க்கும் கட்சி கிடையாது. தி.மு.க.தான் அவ்வாறு பார்க்கிறது.

பா.ஜ.க.மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டு காங்கிரஸ் மற்றும் தி.மு.கவிற்கு பயம் வந்து விட்டது. பிரதமர் நரேந்திரமோடி, நம் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆனால், ராகுல்காந்திக்கு தமிழ் மொழியை சரியாக உச்சரிக்கவே தெரியவில்லை. யாராவது அவருக்கு அதுபற்றி சொல்லிக்கொடுங்கள் என்றார். 

வாக்காளர்களாகிய உங்களுடைய வாழ்க்கை,  இந்த நாடும்  தமிழகமும் யார் கைகளில் இருந்தால், நன்றாக இருக்கும் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.  தமிழக சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க மற்றும் அதிமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.இந்த கூட்டத்திற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவர் மகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும்  திருநெல்வேலி  மாவட்டத்தின், பா.ஜ.க மேலிட  தேர்தல் பார்வையாளர் பாலாஜி உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்