Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூர்- 50 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மார்ச் 04, 2021 01:00

திருப்பூர்: தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் 50 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர் அனுப்பர்பாளையம், திருப்பூர் வடக்கு, 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி, ரூரல் திருப்பூர் தெற்கு ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய 30 சப்-இன்ஸ்பெக்டர்களும், திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் அவினாசிபாளையம், காமநாயக்கன்பாளையம், அவினாசி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய 20 சப்-இன்ஸ்பெக்டர்களை வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.தினகரன் இன்று உத்தர விட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்