Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் ஏழைகளுக்கு கறவை மாடுகள்

மார்ச் 04, 2021 03:56

தஞ்சாவூர் : ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கிராம ஏழை எளிய மக்களுக்கு அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் கறவை மாடுகள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தில் இருக்கும் மலையேறி அம்மன் கோவில் இசைத்திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி நடைபெற்ற சுவாமி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனை முன்னிட்டு  அறம் மக்கள் நலச்சங்கத்தின் சார்பாக  அதன் தலைவர் மக்கள் அரசர் டாக்டர் சு.ராஜா மற்றும் பொதுச்செயலாளர் மக்கள் சேவகர் ரமேஷ்குமார் அவர்களின் ஆலோசனையின்படி  அறம் மக்கள் நலச்சங்கத்தின் குணாளன், மாநில இளைஞரணி தலைவர் ஜெஜெ ராம், மாநில மகளிரணித் தலைவி சத்யபிரியா,

தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பிரசன்ன வெங்கடேசன்,  துணைத் தலைவர் மணிகண்டன், மாநகர மாவட்ட துணைத் தலைவர் சங்கர் மற்றும்  வடக்கு மாவட்ட துணைத்தலைவர்  விக்னேஷ் ஆகியோர் தலைமையில் 3  ஏழைக் குடும்பத்திற்கு  கறவை மாடு கன்று குட்டியுடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர்  கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்