Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமமுகவில் மார்ச் 8,9 ஆகிய தேதிகளில் நேர்காணல்

மார்ச் 05, 2021 03:12

சென்னை:அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது;தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தலைமை கழகத்தில் கடந்த 3-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

6.4.2021 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோருபவர்களுக்கு வருகிற 7-ந்தேதி வரை மட்டுமே விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இதனைத் தொடர்ந்து விருப்ப மனு செலுத்தியவர்களுக்கான நேர்காணல் வருகிற 8 மற்றும் 9-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்