Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நெல்லையில் ஆர்ப்பாட்டம் 

மார்ச் 07, 2021 01:20

திருநெல்வேலி : டெல்லியில் போராடி வரும், விவசாயிகளுக்கு ஆதரவாக திருநெல்வேலியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்தியில் ஆளும், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான,  பா. ஜ.க.அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய வேளாண் மசோதாக்களையும், திரும்பபெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்திரகாண்ட் உள்ளிட்ட, பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம்  நூறாவது நாளை எட்டியுள்ளது.

இதனை கருத்திற் கொண்டு, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், வண்ணார் பேட்டையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இங்குள்ள செல்லபாண்டியன் சிலை அருகில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் அனைவரும், தங்களுடைய கைகளில், கருப்பு கொடிகளை ஏந்தியபடி, மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசை கண்டித்து, கண்டன குரல்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் செல்ல துரை தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்,  மாவட்ட  முன்னாள் தலைவர் ராஜகுரு, மாவட்ட துணை  செயலாளர் செந்தில், விவசாய தொழிலாளர் சங்கத்தின், திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் மாறவர்மன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், பட்சிராஜன்  மற்றும் பேரின்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்