![](admin/uploads/.60afc1046675e7.86477978.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விருதுநகர் : தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் இராஜபாளையம் வட்டார காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தளவாய்புரம், செட்டியார்பட்டி, முத்துச்சாமிபுரம், முகவூர் உள்ளிட்ட பஞ்சாயத்து பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர். இந்த கொடி அணிவகுப்பு பேரணி தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்தி வருவது குறிப்பிடதக்கது.