Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சசிகுமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

மார்ச் 07, 2021 01:50

புதுக்கோட்டை : புதுக்கோட்டை  நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சசிகுமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முக்கிய கட்சிகள் தொகுதி பங்கீட்டில் மூழ்கியிருக்க, தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு தேர்தலில் மும்முரம் காட்டி வருகிறது நாம் தமிழர் கட்சி. வேட்பாளர் தேர்வு, ஒருங்கிணைப்பாளரின் பரப்புரை, வேட்பாளர் பரப்புரை என அனைத்து கட்சிக்கும் முன்னோடியாய் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஏறத்தாழ தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, மக்களிடையே அபிமானத்தைப் பெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் சசிகுமார் பிரசார வியூகம் அமைத்து, மற்ற வேட்பாளர்களுக்கு முன்னோடியாய் தன்னை மக்களுக்கு அறிமுகப் படுத்திக் கொண்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போஸ் நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, வாக்காளர்களை சந்தித்து விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டு தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்து, தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தங்கள் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மாவட்டத் தலைவர் பொன்வாசிநாதன், மாவட்ட பொருளாளர் வீரப்பன், போஸ் நகர் பகுதி பொறுப்பாளர் மகாராஜா, வட்டச்செயலாளர் சக்கரபாணி, வட்ட பொருளாளர் விஜயகுமார், வட்ட பிரதிநிதி பீர்பால் உட்பட பலர் மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

தலைப்புச்செய்திகள்