![](admin/uploads/.5d3ad7016e04d9.90179121.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காஞ்சிபுரம் :பட்டப்பகலில் காஞ்சிபுரம் நகரில் சைக்கிள் திருடும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.காஞ்சிபுரம் நகரை ஓட்டியுள்ளது மாருதி நகர் பகுதி. இதனைச்சுற்றி புதிய குடியிருப்பு பகுதிகள் விரைவாக வளர்ந்து வரும் நிலையில், இப்பகுதிகளில் வீட்டில் இருந்த சைக்கிள்கள் திருடுபோவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசி டிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சோதனையிட்டபோது குடில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் நோட்டமிட்டவாறே செல்வதும் யாரும் வீட்டருகே இல்லை என்பதை உணர்ந்து வெளியே நிறுத்தி வைக்கபட்டிருந்த சைக்கிளை திருடி அலேக்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு தப்பி பதிவாகியிருந்தது.
பட்டப்பகலில் எவ்வித அச்சமுமின்றி இளைஞர் இருசக்கர வாகனத்தில் உலாவருவதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் எனவும், மேலும் வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கையாக உள்ளது.