![](admin/uploads/.5de0b9d8436975.72975300.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமநாதபுரம் :அதிமுக கூட்டணியில் திருவாடானை தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்க வில்லையெனில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டி என ராமநாதபுரத்தில் நடைபெற்ற புதிய நீதிகட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரத்தில் புதிய நீதிக்கட்சியின் சார்பில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் பேசும்போது எல்லா ஜாதி சங்கமும் அரசியல் கட்சியாக உள்ளநிலையில் அகமுடையார் ஜாதியை புதிய நீதிக்கட்சியுடன் இணைத்து ஏ.சி.சண்முகம் தலைமையில் கடந்த மாதம் முதல்வரை சந்தித்த நிலையில் திருவாடானை தொகுதியில் அகமுடையார் சமூகத்திற்கு ஒரு தொகுதி தருவதாக உறுதியளித்தனர்.
இதை மீறினால் அகமுடையார் சங்கத்தின் சார்பில் திருவாடானை, திருமங்கலம், ராமநாதபுரம் சிவகங்கை போன்ற தொகுதிகளில் அகமுடையார் இனத்தின் சார்பாக தனித்து போட்டியிடுவோம் அல்லது அ.தி.மு.க.சார்பில் அகமுடையார் இனத்தின் சார்பில் யாரை நிறுத்தினாலும் ஆதரிப்போம் என கூறினார்.