![](admin/uploads/.5e8359c4425d76.89273975.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஈரோடு : துளுவ வேளாளர் நல சங்கத்தின் தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இத்தேர்தல் மூலம் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணை செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர் தேர்தல் மூலம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் இச்சங்கத்திற்கான நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களின் பொறுப்புக்காலம் நிறைவு பெறவுள்ளதையடுத்து 2021 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் ஈரோடு கருங்கல்பாளையம் துளுவ வேளாளர் சமுதாய திருமணத்தில் நடைபெற்றது.
இந்த தேர்தலை முன்னிட்டு கும்பம் சின்னத்தில் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் சுந்தரவடிவேல் தலைமையில் 25 பேர் ஒரு அணியாகவும், கடந்தாண்டின் தலைவராக பணியாற்றிய புனிதன் இத்தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடவுள்ளதை முன்னிட்டு அவரது தலைமையில் 25 பேர் என ஒரு அணியாகவும் என இத்தேர்தலில் அனைத்து பொறுப்புகளுக்கும் சேர்த்து 50 பேர் தேர்தலில் போட்டியிட்டு துளுவ வேளாளர் நல சங்க நிர்வாகிகளிடமும் பொறுப்பாளர்களிடமும்
இச்சங்கத்திற்கான அனைத்து விதமான கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக கூறி வாக்கு சேகரித்து தேர்தலில் போட்டியிட்டனர்.இதனை முன்னிட்டு இச்சங்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் நீண்ட வரிசையில் அரசின் கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் அமைதியாக புதிய நிர்வாகிகளை வாக்களித்து தேர்வு செய்தனர் .