![](admin/uploads/.6443c6c1108232.45266561.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி : திருமண்டல, மத்திப சபை, மன்ற நிர்வாக குழு உறுப்பினர் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், பாளையங்கோட்டை வட்டம், பெருமாள்புரத்தில் நடைபெற்றது ."தென்னிந்திய திருச்சபை" என்று அழைக்கப்படும், சி.எஸ்.ஐ.டயோசீசன் திருமண்டலத்தில், மத்திபசபை மன்றத்திற்கு, புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை, தேர்வு செய்வதற்கான, நேரடி தேர்தல், இம்மாதம் (மார்ச்) 13-ஆம் தேதி காலையில், பாளையங் கோட்டையில் நடைபெறவுள்ளது.
அதனையொட்டி, அந்த தேர்தலில், முன்னாள் லே-செயலாளர் வேதநாயகம் அணியின் சார்பில், போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை, அறிமுகம் செய்திடும் நிகழ்ச்சி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், பெருமாள் புறத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் லே-செயலாளர் வேதநாயகம் தலைமை வகித்து, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாழ்த்துரை வழங்கினார்.
வேட்பாளர்களான, மணக்காடுஜீவகுமார், என்.ஜி.ஓ.காலனி சாம்சங்பால்ராஜ், பெருமாள்புரம் எட்வின்லாரன்ஸ், மிலிட்டரிலைன் புஷ்பாபொன்மணி, ஆரைக்குளம் தனசேகரன் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.கதீட்ரல் பேராலய சேகரக்குரு பீட்டர்தேவதாஸ், மிலிட்டரிலைன் சேகரத் தலைவர் பில்லி, குருவானவர்கள் டேவிட்அன்புபிரபாகர், ஜான்செல்வின், விஜய்சிங், ஜெபரத்தினம், அருண்ஜெபத்துரை, முத்துராஜ்,தேவதாஸ்ஞானராஜ், பொண்ணு, வழக்கறிஞர்ஜெனி, கரையருப்புஜெயராஜ் ஆகியோர் உட்பட, திரளானோர்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.