![](admin/uploads/.5de8c263266556.14203065.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி : திருநெல்வேலிக்கு மிக அருகில் ஆலங்குளத்தில், கனரக வாகனம் உரசியதில், கார் பள்ளத்தில் கவிழ்ந்து, 2 பேர் பலியானா சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள, "கீழ வெள்ளக்கால்" கிராமத்தை சேர்ந்தவர் ஹரிமோகன். இதே மாவட்டம், வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர்கள் இருவருடன், நண்பர்களான, கட்டபொம்மன், மனோஜ்குமார், மதன் ஆகியோருமாக, மொத்தம் 5 பேர், ஒரு காரில், திருநெல்வேலிக்கு வந்து விட்டு, நள்ளிரவில், வீடுதிரும்பியுள்ளனர்.
இவர்கள் வந்த கார், முக்கூடலை அடுத்துள்ள,இடைகால் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள, சர்க்கரை ஆலையில் இருந்து, பழுதடைந்த இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு, கண்டெய்னர் லாரி ஒன்று, பெங்களூருக்கு, புறப்பட்டு சென்றது.
ஆலங்குளம் பெட்ரோல் நிலையம் அருகில், அந்த கனரகம் வாகனம் வந்து கொண்டு இருந்த போது, காரின் மீது, கண்டெய்னர் லாரியில் இருந்த இயந்திரங்கள்,
உரசியதால், அடுத்த நிமிடமே, கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன்பகுதி, முழுவதும் நொறுங்கி, சேதம் அடைந்தது. காரில் பயணம் செய்த ஐவரில், ஹரிமோகன், சிவக்குமார் ஆகிய இரண்டு பேரும், சம்பவ இடத்திலேயே, உயிர் இழந்தனர். மேலும், அதே காரில் இருந்த, கட்டபொம்மன் என்பவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மீதியுள்ள இருவருக்கும், பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ஆலங்குளம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், உதவி ஆய்வாளர் பாரத் லிங்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் இருந்தவர்களை மீட்டு, உடனடியாக, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில், அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக, ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கனரக வாகன டிரைவர் மன்னார்குடியை சேர்ந்த மோதிலால் என்பரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.