Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரியலூர் : 100% வாக்களிப்போம் என சமையல் சிலிண்டரை அடிக்கி வைத்து விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கபட்டு உள்ளது. இதனையொட்டி அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நூறு சதவீத வாக்களிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சமையல் எரிவாயு சிலிண்டரில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் ரத்னா கலந்து கொண்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார். இதில் 100 சதவீத வாக்களிப்போம் என்ற எழுத்து வடிவில் பிரமாண்டமாக சிலிண்டர் அடுக்கி வைக்கபட்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் சிலிண்டர் விநியோகதஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.