![](admin/uploads/.626b8b4f4f28e4.60575894.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர் : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் வங்கி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் மேற்கொள்ளப்பட்டது.உலக மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் எச்டிஎப்சி தனியார் வங்கி சார்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பல்வேறு துறை சார்ந்த பெண் அலுவலர்கள் மற்றும்
ஊழியர்களுக்கு இலவசமாக கர்ப்பப்பை பரிசோதனை மற்றும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.தனியார் மருத்துவமனையோடு இணைந்து வங்கி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மருத்துவ முகாமை திருப்பூரை சேர்ந்த பெண் தொழிலதிபர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதில் ஏராளமான அலுவலர்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.