Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வயல்வெளிகளில் எரிவாயு குழாய் பதிப்பது நிறுத்தக்கோரி ஆட்சியரிடம் மனு

மார்ச் 08, 2021 04:14

மதுரை  :சென்னை எண்ணூர் தூத்துக்குடி வரையிலான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாகி குழாய் பதிக்கும் பணி மதுரை மாவட்டத்தில் மாங்குளம் முதல் குன்னத்தூர் வரை செல்ல இருக்கிறது. இதில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிதம்பரம் பட்டி குன்னத்தூர் மாயாண்டி பற்றி பேரா கோவில்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பகுதிகள் வயல்வெளிகளாகும்.

இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் வயல்வெளிகளில் எரிவாயு குழாய் பதிப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர்,மேலும் விவசாயம் செய்து கொள்ளலாம் எனவும் கூறுகின்றனர்.ஆனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி உள்ளனர். எரிவாயு குழாய் அடிக்கப்பட்டால் பிற்காலத்தில் ஏதாவது கசிவு ஏற்பட்டால் விவசாயம்  கேள்விக் குறியாகிவிடும் என்ற பயத்தில் உள்ளனர்.

இதே நிலைமை ஆந்திராவில் காக்கிநாடா அருகே உப்பிடி கிராமத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் கசிவு ஏற்பட்டு ஒரு கிராமமே வெளியேறி முகாமில் தங்க வைத்தது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் வயல் வெளியிலும் கிராமப் பகுதிகளிலும் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த கோரி மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய கிராம பொதுமக்கள் விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்