Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாரண்யம் காவல் நிலையத்தில் மகளிர் தின விழா

மார்ச் 09, 2021 02:00

நாகை : வேதாரண்யம் காவல் நிலையத்தில் மகளிர் தின விழா வட்டாட்சியர் ரமாதேவி தலைமையில்  கொண்டாடப்பட்டது.உலக மகளிர்தின விழா மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாகை மாவட்டம் வேதாரண்யம் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் இணைந்து  மகளிர் தின விழாவை  கொண்டாடினர். நிகழ்ச்சியில் வேதாரண்யம், தலைஞாயிறு, வாய்மேடு,

காரியப்பட்டினம், வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட மகளிர் காவல் நிலைய காவலர்கள்  ஆய்வாளர் மலர்கொடி தலைமையில் ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்து விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சால்லை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இதில் வேதாரண்யம் கோட்டாட்சியர் துரைமுருகன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகாதேவன்  ஆய்வாளர் மலர்கொடி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்