Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்னைய திருமணம் செய்துகொள்ள சொல்லி வறுபுறுத்தியதால கொலை செய்தேன்

ஏப்ரல் 08, 2019 08:42

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி என்ற பகுதியில் சாலையோரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டவரின் வாக்குமூலத்தால் பல்வேறு திருப்பங்கள் ஏற்ப்பட்டுள்ளது. 

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒருவரை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக  புகார் அளித்தவர்களிடம் விசாரித்தனர். அதில் சடலமாகக் கிடந்த பெண், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து  வந்தது தெரிந்தது. ஏற்கனவே இவரைக் காணவில்லை என அப்பெண்ணின் பெற்றோர் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின் தான் போலீஸாருக்குத் தெரிந்துள்ளது. 

இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக சதீஸ் எனபரை கைது செய்து விசாரித்துவருகின்றனர். இந்நிலையில் மாணவி கடைசியாக நின்ற இடத்தில் அவருடைய செல்போன் சிக்னலும், கைது செய்யப்பட்டுள்ள நபரின் செல்போன் சிக்னலும் ஒரே இடத்தில் இருந்ததை அடுத்து, அவர் கைது  செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சிசிடிசி கேமராவில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் திண்டுக்கல்லை சேர்ந்த சதீஸை கைது திண்டுக்கல் மாவட்டத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதில் சதீஸுக்கு பிரகதியை திருமணம் செய்துவைக்காமல் வேறொருவருடன்  திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் சதீஸ் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வந்தனர். 

இந்நிலையில் கைதான சதீஸ் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: பிரகதியும் நானும்  உறவினர்கள் ஆதலால் சிறுவயதில் இருந்தே இருவரும் நெருங்கிப் பழகினோம். ஒருவரை ஒருவர் காதலித்தோம். ஒருகட்டத்தில் அவர் கேட்கும் நகைகள் வாங்கிக் கொடுத்ததுடன் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பணம் செலவழித்தேன். அதனால் கடனாளி ஆனேன். 

எனது விருப்பமில்லாமல் வேறு ஒரு பெண்னுடன் எனக்குத் திருமணம் செய்து வைத்தனர் என் பெற்றோர்.  அதனால அவருடன் பேச மறுத்தேன். அப்போது பிரகதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனாலும் என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி தொல்லை செய்தார். 

அதனால் அவரை என்னுடன் அழைத்துச் சென்று கொலை செய்து சாலையோரமாய் வீசி விட்டதாகத் தெரிவித்துள்ளார். இவரது வாக்குமூலம் இந்த வழக்கில் ஒர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதையடுத்து தொடர்ந்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்