![](admin/uploads/.64ddb7af66b2e9.20366200.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கரூர் : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி சுகாதாரத் துறை மருத்துவமணையில் பணியாற்றும் மகளிர் செவிலியர்களுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக சாதனை பெண் விருது என்ற பெயரில் சான்றிதழ் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில கெளரவ தலைவரும் , தேசிய காடுகள் பராமரிப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினரும் , கிராமியம் தொண்டு நிறுவனத்தின் தலைவருமான மக்கள் நாயகன் திரு.நாராயணன் அவர்கள் பேசும் போது கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் மிகவும் சிறப்பாக எந்த நேரமும் மக்களுக்காக பணியாற்றிய நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் , நல்ல ஆரோக்கியத்துடன் என்றும் மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் கடவுளிடம் வணங்கி வேண்டுகிறோம் என்றார்.
அதன் பின்பு பேசிய சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி கொரோனா காலக்கட்டத்தில் தன் குடும்பத்தையும் , உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றிய தங்களின் பணியானது மிகவும் போற்றதக்கது. மேலும் உங்களை எல்லாம் சிறப்பாக வழி நடத்திய மக்களின் மருத்துவர் அமீர்தீன் அவர்களுக்கு இந்த நேரத்தில் கோடான கோடி நன்றியினை அவருக்கு தெரிவித்து கொள்கிறேன்.
மிக முக்கியமாக ஒட்டு மொத்த பொதுமக்களின் சார்பாக உங்கள் அனைவரும் உலக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் நீங்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக தொடர்ந்து பணியாற்றிட வேண்டுமென தெரிவித்தார்.இந்த நிகழ்வில் மருத்துவர் அமீர்தீன் மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கருணாநீதி ,விஸ்வநாதன் , ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.