Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீட்டில் திருடிய பொதுமக்களிடம் மாட்டிக்கொண்ட பெண் கைது

மார்ச் 09, 2021 02:21

நாகை  :ஆயக்காரன்புலத்தில் வீட்டில் உள்ள பொருட்களை திருடி வாகனத்தில் ஏற்றி முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் கணேசன் என்பவரது வீட்டுக்குள் புகுந்த சின்னம்மா என்ற பெண்  இரண்டு சவரன் நகை,

வீட்டில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் பாத்திரங்கள்  உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் திருடி சரக்கு ஆட்டோவில் ஏற்றி தப்பி செல்ல முயன்றுள்ளார்.அப்போது அங்கேயிருந்தவர்கள் சின்னம்மாவை பிடித்து வாய்மேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்