Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செட்டிகுளத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இரு சக்கர வாகன பேரணி

மார்ச் 09, 2021 02:32

பெரம்பலூர் : செட்டிகுளத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியை ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் அருளானந்தம் தொடங்கி வைத்தார். இப்பேரணி செட்டிகுளம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் சென்றது. 

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களிடையே வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆலத்தூர் துணை வட்டாட்சியர்  சிலம்பரசன் வருவாய் ஆய்வாளர் ரெங்கநாதன், கிராம நிர்வாக அலுவலர்கள்,செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்