Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின் கம்பி அறுந்து விழுந்து  மின்சாரம் தாக்கியத்தில்  முதியவர் பலி

மார்ச் 09, 2021 02:32

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே குடியிருப்புகளின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பி  அறுந்து விழுந்து  மின்சாரம் தாக்கியத்தில்  முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஜேக்கப். இவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஜேக்கப் வழக்கம்போல் வீட்டின் முன்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் மேலே செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பி  எதிர்பாராத விதமாக திடீரென அறுந்து ஜேக்கப் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி ஜேக்கப் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் மின்சாரத்தை துண்டித்து ஜேக்கப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து மின்சார ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையால் எச்சூர் அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறுகையில் குடியிருப்புகளின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பங்கள் மற்றும் கம்பிகளால்  மக்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை எனவே உடனடியாக இவற்றை அகற்ற அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் புகார் செய்தும் அரசு நிர்வாகம் அலட்சியப்படுத்தியதால் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே மின் கம்பங்களையும் உயரழுத்த மின் வயர்களையும் இப்பகுதியில் இருந்து அகற்றும் வரை எங்களுக்கு மின் இணைப்பு வேண்டாம் என்று அந்தப் பகுதி மக்கள் மின் இணைப்பு அளிக்க வந்த அரசு மின் ஊழியர்களிடம் கூறியதால் அம்பேத்கர் தெரு முழுவதும் இருளில் மூழ்கியது. மேலும் உயர் அழுத்த மின் வயர் அறுந்து விழுந்ததால் ஜேக்கப் என்பவர் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்