Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுக்கோட்டை : பாஜக சார்பில் வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம் என்ற பெயரில் வாக்காளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.பாஜக மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம் என்ற பெயரில் வாக்காளர் சந்திப்பு மற்றும் வீட்டு தொடர்பு பேரணி புதுக்கோட்டை போஸ் நகர், பொற்பனையான் கோவிலிலிருந்து துவங்கப்பட்டது.
பேரணிக்கு புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஏவிசிசி கணேசன் தலைமை வகித்தார். நகர தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் லெட்சுமணன், மதன்குமார், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் சந்திரசேகர், பட்டியல் அணி முன்னாள் தலைவர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப நகர தலைவர் பழனிசாமி,
நகர செயலாளர் ரவிச்சந்திரன், சிங்காரம், கைலாஷ், சுப்பிரமணியன், நகர பொருளாளர் ஆனந்த், நகர கிளை தலைவர்கள் லட்சுமணராஜு, அம்சவல்லி, கமலவேணி, தாயினி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள்,சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் திரளாக கலந்து கொண்டனர். வீடு வீடாக சென்று மத்திய அரசின் சாதனை விளக்க பிரசுரங்கள் வழங்கப்பட்டன.தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கோரி பிரச்சாரம் செய்யப்பட்டது.