Monday, 24th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி : தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட 299 சில்வர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நள்ளிரவு திருச்சி விமான நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தனி வட்டாட்சியர் சுமதி தலைமையிலான
குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது தேவகோட்டையில் இருந்து திருச்சி வந்த தனியார் பார்சல் சர்வீஸ் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 299 சில்வர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை சுமதி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் குகன் அவர்களிடம் வழங்கினார்.