![](admin/uploads/.5e92b7325c3bf0.21685918.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர் : வடலூரில் ஏலச்சீட்டு நடத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடலூர் பகுதி பொது மக்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளித்தனர்.கடலூர் மாவட்டம் வடலூர் பிள்ளை நகர் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். என்எல்சியில் பணிபுரிந்து வரும் இவர் பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ரவிச்சந்திரனிடம் 2 லட்சம் ஒன்றரை லட்சம் இரண்டரை லட்சம் என ஏலச்சீட்டு மூலம் 2000க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஏலச்சீட்டு பணத்தை திருப்பி கேட்டதற்கு ரவிச்சந்திரன் மிரட்டும் தோணியில் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஏலச்சீட்டு கட்டிய பொதுமக்கள் கடலூர் பொருளாதார குற்றப்பிரிவில் தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி புகார் மனு அளித்தனர்.