Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி : ஆதித்தமிழர் பேரவை கட்சிக்கு, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஓரிடம் வழங்கியமைக்கு, தி.மு.க.வுக்கு நன்றி தெரிவித்து, திருநெல்வேலியில் அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.அடுத்த மாதம் ஆறாம் தேதி நடைபெறவுள்ள, தமிழக சட்டமன்ற தேர்தலில், அருந்ததியர் மக்களுக்கு, அரசியல் அங்கீகாரம் அளித்து, ஒரு தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் கலைகண்ணன் தலைமையில், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், அருந்ததியர் மக்கள், தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளில், மாவட்ட தலைவர் ரமேஷ் அம்பேத்கர், தூய்மை தொழிலாளர் பேரவையின், மாவட்ட செயலாளர் தமிழ்வாணன், பேரவையின் மாநகர செயலாளர் தமிழ்குட்டி, மாவட்ட தொழிநுட்ப அணியின், துணை செயலாளர் குருராஜ், தூய்மை தொழிலாளர் பேரவையின், துணை செயலாளர் ஹோண்டாராஜ் மற்றும் ஆட்டோ சங்க செயலாளர் காளிராஜ் உட்பட, பலர் கலந்து கொண்டு, தி.மு.க.வை ஆதரிப்போம் என்று, குரல் எழுப்பினர்.