Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரகடத்தில்  அடையாளம் தெரியாத  வாகனம் மோதி மூதாட்டி பலி

மார்ச் 10, 2021 12:58

காஞ்சிபுரம்  : ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடத்தில்  அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புத்தூர் அடுத்த ஒரகடத்தில் செங்கல்பட்டு-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் 60வயது மதிக்கதக்க மூதாட்டி சாலையோரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று அம்முதாட்டியின் மீது மோதியது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

இடித்த வேகத்திலேயை விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பி சென்றது. இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓரகடம் போலீசார் மூதாட்டியின் உடலை கைபற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது என்பதை ஓரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்