Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம்: அரசு உத்தரவை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜனவரி 30, 2019 10:54

சென்னை: சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த எஸ்.நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் உரிய வாகன கட்டணம் வசூலிப்பது இல்லை. அதிகப்படியான கட்டணம் வசூலிக்கின்றனர். 

திரையரங்குகளில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். இது திரையரங்கு ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது. 

திரையரங்குகளில் உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. உள்ளே விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது. குடிநீர் கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை’ என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் திரையரங்குகளில் உள்ள வாகன பார்க்கிங் கட்டணம் தொடர்பாக அரசு என்ன உத்தரவு பிறப்பித்துள்ளதோ, அந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்